×

காவிரியில் போதிய இருப்பு இல்லாததால் கிடைக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா வேண்டுகோள்

கரூர், மே 1: கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 48 வரையுள்ள பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் சணப்பிரட்டி பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருப்பே உள்ள காரணத்தினால் காவிரி ஆற்றில் போதுமான நீர் வரத்து இல்லை. இதன் காரணமாக குறைந்த நீர் ஆதாரத்தை கொண்டு கரூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு தற்போது குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. எனவே பொதுமக்கள் வருகின்ற பருவ மழை பொழிந்து ஆற்றில் போதுமான நீர் வரத்து வரும் வரை மாநகராட்சி மூலம் வழங்கும் குடிநீர், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலையின் காரணமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம் முன்புறம், பசுபதிபாளையம் பேருந்து நிலையம், வாங்கப்பாளையம் சுங்க சாவடி அருகில், மண்டலம் -4 அலுவலகம் முன்புறம், வெங்கமேடு பிள்ளையார் கோயில் முன்புறம் தண்ணீர் பந்தல் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது முறையாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்களை கடும் வெப்ப அலையில் இருந்து காத்துக்கொள்ள நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post காவிரியில் போதிய இருப்பு இல்லாததால் கிடைக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Karur Corporation ,Commissioner ,Sudha ,Karur ,Ward No. 1 to 48 ,Inam Karur ,Dandoni ,Sanapratti ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி...